உள்ளூர் செய்திகள்

சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் பறிமுதல்- பயணியிடம் விசாரணை

Published On 2022-07-31 16:15 IST   |   Update On 2022-07-31 16:15:00 IST
  • சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
  • தங்கம் கடத்தல் தொடர்பாக பிடிபட்ட பயணியிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணி 4.20 கிலோ தங்கத்தை இலங்கைக்கு கடத்த மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2.30 கோடி ஆகும்.

தங்கம் கடத்தல் தொடர்பாக பிடிபட்ட பயணியிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News