உள்ளூர் செய்திகள்

ஒரே நாளில் 3 பெண்கள் மாயம்

Published On 2022-12-04 08:41 GMT   |   Update On 2022-12-04 08:41 GMT
  • கடந்த 1- ம் தேதி வழக்கம் போல வேலைக்கு சென்ற அவர், மறுபடியும் வீடு திரும்பவில்லை.
  • அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அன்னதானப்பட்டி:

சேலம் தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தீபா (வயது 25). இவர் அதே பகுதியில் உள்ள மருந்து கடையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 1- ம் தேதி வழக்கம் போல வேலைக்கு சென்ற அவர், மறுபடியும் வீடு திரும்பவில்லை. அவர் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

இதுபோல் சேலம் தாத காப்பட்டி, தாகூர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (60). கடந்த மாதம் 28- ம் தேதி வீட்டில் இருந்து வேலை விஷயமாக வெளியே சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவி

சேலம் சின்னத்திருப்பதி பகுதியைச் சேர்ந்தவர் தேவதர்ஷினி (20). இவர் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். வீட்டில் இருந்த இவர் நேற்று முன்தினம் திடீரென மாயமானார். இது குறித்து அவரின் தந்தை அளித்த புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

சேலம் திருவாக்கவுண்ட னூர் பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா (27). கடந்த 1- ம் தேதி வீட்டில் இருந்து அவர் திடீரென மாயமானார். இது குறித்து அவரின் கணவர் பூபதி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சூரமங்கலம் போலீசார் மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

சேலம் இரும்பாலை அருகே உள்ள பூமிநா யக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அலமேலு (50). இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 1- ம் தேதி அருகில் உள்ள மளிகைக் கடைக்குப் பொருட்கள் வாங்கச் சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் இரும்பாலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News