உள்ளூர் செய்திகள்

சிறுமி உள்பட 3 பெண்கள் மாயம்

Published On 2023-03-04 15:02 IST   |   Update On 2023-03-04 15:02:00 IST
  • திருமணத்துக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்ப வில்லை.
  • திருமணம் ஆகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அவரும் திடீரென மாயமாகிவிட்டார்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் கடத்தூரை அடுத்துள்ள புளியம்பட்டியை சேர்ந்தவர் மோனிஷா (வயது 22). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது தோழி ஒருவரின் திருமணத்துக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்ப வில்லை. இதுகுறித்து அவரது தாய் உமா மகேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல உங்கரான அள்ளி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் மாயமாகிவிட்டார். இதுகுறித்து அவரது தாய் உண்ணாமலை கொடுத்த புகாரின்பேரில் தருமபுரி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி சிறுமியை தேடி வருகின்றனர்.

இந்த வகையில் ஒகேனக்கல் அருகேயுள்ள ஏரிக்காடு பகுதியை சேர்ந்த மஞ்சு (24) என்பவர் திருமணம் ஆகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அவரும் திடீரென மாயமாகிவிட்டார்.

இது குறித்து அவரது தாய் விஜய தந்த புகாரின்பேரில் ஒகேனக்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News