உள்ளூர் செய்திகள்

அரசு கல்லூரியில் 3-ம் கட்ட கலந்தாய்வு

Published On 2022-08-23 09:03 GMT   |   Update On 2022-08-23 09:03 GMT
  • விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்காத மாணவ- மாணவியர்கள் கல்லூரி அலுவலகத்திற்கு நேரடியாக வந்து விண்ணப்பித்து சேர்க்கை பெற்றுக் கொள்ளலாம்.
  • கலந்தாய்வி–ன் போது 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் பல அசல் மற்றும் மூன்று நகல்களுடன் கொண்டு வர வேண்டும்.

குத்தாலம்:

குத்தாலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-23-ம் கல்வி ஆண்டுக்கான 3ம் கட்ட கலந்தாய்வு பி.எஸ்.சி., கணிதம், கணினி அறிவியல், பிகாம்., வணிகவியல், பி.ஏ., தமிழ், பி.ஏ., ஆங்கிலம் ஆகிய அனைத்து பாடப்பிரிவுகளுக்கு மாணவ, மாணவியர் சேர்க்கை 25-ந்தேதி நடைபெற இருப்பதால் மேற்கண்ட பாடப்பிரிவுகளுக்கு சேர விரும்பும் பிளஸ்2 தேர்ச்சி பெற்று இதுவரை இக்கல்லூரிக்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்காத மாணவ, மாணவியர் கல்லூரி அலுவலகத்திற்கு நேரடியாக வந்து விண்ணப்பித்து சேர்க்கை பெற்றுக் கொள்ளலாம்.

கலந்தாய்வி–ன் போது 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-5 உள்ளி–ட்டவற்றை அசல் மற்றும் மூன்று நகல்களுடன் கொண்டு வர வேண்டும்.

சேர்க்கைக்கு தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் அன்றே கல்லூரியில் கட்டணம் ரூ.3350 செலுத்தி கல்லூரியில் சேர்க்கை பெற்றுக் கொள்ளுமாறு கல்லூரி முதல்வர் முனைவர் வெ.விஜயேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News