உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

போடி அருகே பெண்கள் உள்பட 3 பேர் மாயம்

Published On 2022-11-13 05:23 GMT   |   Update On 2022-11-13 05:23 GMT
  • குடும்ப பிரச்சினை மற்றும் வீட்டைவிட்டு வெளியே சென்ற பெண்கள் திடீரென மாயமாகினர்.
  • போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

தேனி:

போடி புதுகாலனியை சேர்ந்தவர் ஜானகிராமன். இவரது மனைவி அமுதா(36). இவர்களுக்கு பிரியதர்ஷன், தேவ்பிரசாத் என 2 மகன்கள் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மனஉளைச்சலில் இருந்த அமுதா தனது 2-வது மகன் தேவ்பிரசாத்தை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்வதாக வீட்டில் கூறிச்சென்றார்.

ஆனால் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் போடி நகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உத்தமபாளையம் காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த அறிவுச்செல்வம் மகன் சாருலதா(21). இவர் கம்பத்தில் உள்ள ஜவுளிகடையில் வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று வேலைக்கு சென்ற சாருமிதா மாயமானார். அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்காததால் ராயப்பன்பட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News