உள்ளூர் செய்திகள்

கோவைக்கு கடத்தி வந்த 220 கிலோ குட்கா பறிமுதல்

Published On 2022-10-11 09:35 GMT   |   Update On 2022-10-11 09:35 GMT
  • 5 கிலோ கஞ்சாவை போலீசார் பிடித்தனர்.
  • லாரியை சோதனையிட்டபோது குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது.

 சூலூர்,

சூலூர் அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து கோவை நோக்கி வந்த லாரி ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து கருமத்தம்பட்டி பிருந்தாவன் நகர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுப ட்ட னர். அப்போது அவ்வழியாக வந்த லாரி ஒன்றை போலீசார் சோதனை யிட்டனர்.

அப்போது லாரி டிரைவர் கீழே இறங்கி ஓட முயற்சித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் டிரைவரை துரத்தி பிடித்து விசாரித்தனர். மேலும் லாரியை சோதனை யிட்டபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

விசாரணையில் டிரைவர் கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த பழனிசாமி என்பது தெரியவந்தது. கடந்த 2 ஆண்டுகளாக டிராவல்ஸ் நிறுவ னத்தில் டிரைவராக பணியாற்றி உள்ளார். தற்போது பணத்துக்கு ஆசைப்பட்டு அவர் பெங்களூருவில் இருந்து கோவைக்கு குட்கா பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து ஈஸ்வரவனை போலீசார் சூலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். அவர் கடத்தி வந்த 120 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

சூலூர் அருகே பாரதிபுரத்தில் வசிப்பவர் செல்வம்.இவர் அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு குட்கா சப்ளை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சூலூர் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் போலீசார் பாரதிபுரம் பகுதியில் ரகசிய சோதனை மேற்கொண்டனர்.

அப்போது காரில் செல்வம் (35) குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவர் கடத்தி வந்த 100 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சூலூர் அருகே தென்ன ம்பாளையம் சாலையில் பொத்தியாம் பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சூலூர் போலீசார் சப்-இன்ஸ்பெ க்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் பொத்தியாம் பாளையம் பகுதியில் தீவிர வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது ஒரு இளைஞர் இருசக்கர வாகனத்தில் வேகமாக அவ்வழியே வந்தார். அவரை நிறுத்தி சோதனை செய்தபோது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த 5 கிலோ கஞ்சா வை போலீசார் பிடித்தனர். விசாரணையில அவர் வாக ரையாம் பாளையம் பகுதி யைச் சேர்ந்த ஸ்ரீதரன் (19) என தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். 

Tags:    

Similar News