உள்ளூர் செய்திகள்

10 நாட்களில் 21 பாம்புகள் மீட்பு

Published On 2023-08-18 13:52 IST   |   Update On 2023-08-18 13:52:00 IST
  • 10 நாட்களில் 8 மலைப்பாம்புகள், 5 நாகப்பாம்புகள், தலா 3 சாரைப் பாம்புகள், கண்ணாடி விரியன் மற்றும் 2 கட்டு விரியன் பாம்புகள் பிடிபட்டுள்ளன.
  • வேப்பன ப்பள்ளி சாலையில் அரிய வகை நட்சத்திர ஆமை ஒன்றும், பொதுமக்கள் வளர்த்த இரு கிளியும் மீட்கப்பட்டன.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி, வேலம்பட்டி, காவேரிபட்டணம், பாரூர் உள்ளிட்ட பகுதிகளில் ஊருக்குள் புகுந்த மலைப்பாம்பு உள்ளிட்ட பாம்புகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த தகவல் அடிப்படையில் வனத்துறையினர் பிடித்தனர்.

இவை அனைத்தும் கிருஷ்ணகிரி வனச்சரகர் அலுவலகத்துக்குக் கொண்டு வரப்பட்டன. இது தொடர்பாக வனச்சரகர் ரவி கூறியதாவது:-

கிருஷ்ணகிரி பகுதியில் கடந்த 10 நாட்களில் 8 மலைப்பாம்புகள், 5 நாகப்பாம்புகள், தலா 3 சாரைப் பாம்புகள், கண்ணாடி விரியன் மற்றும் 2 கட்டு விரியன் பாம்புகள் பிடிபட்டுள்ளன.

மேலும், வேப்பனப்பள்ளி சாலையில் அரிய வகை நட்சத்திர ஆமை ஒன்றும், பொதுமக்கள் வளர்த்த இரு கிளியும் மீட்கப்பட்டன.

இவற்றை மேலுமலை, வேப்பனப்பள்ளி, மகா ராஜகடை காப்பு காடுகளில் விடுவிக்க நடவடி க்கை எடுக்கப்பட்டுள்ளது.

குடியிருப்புகள் மற்றும் விளை நிலங்களில் பாம்பு வந்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதைப் பாதுகாப்பாகப் பிடித்து காட்டில் விட உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News