உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.

சொத்து தகராறில் தாய்-மகன் மீது தாக்குதல்

Published On 2022-06-01 12:02 IST   |   Update On 2022-06-01 12:02:00 IST
ஏம்பலம் அருகே சொத்து தகராறில் தாய்-மகனை தாக்கியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:

ஏம்பலம் அருகே புதுக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன்.  இவருடன் உடன் பிறந்தவர்கள் 4 பேர். இவர்களுக்கு பொதுவான சொத்தை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சரிசமமாக பிரித்து கொடுக்கப்பட்டது.

இதற்கிடையே ராமச்சந்திரனின் சகோதரர் முருகனின் மகன் சீத்தாராமன் அவருக்கு சொந்தமான இடத்தில் கூரை கொட்டகை அமைத்து வசித்து வந்தார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கடும் மழையினால் கூரை கொட்டகை சேதமடைந்ததால் சீத்தாராமனை புதிய வீடு கட்டும் வரை  ராமச்சந்திரன் தனக்கு சொந்தமான வீட்டில் தங்கியிருக்குமாறு கூறினார்.

இந்த நிலையில்  ராமச்சந்திரனும், அவரது மனைவி விமலாவும் வீட்டை காலி செய்யுமாறு சீத்தாராமனிடம் கூறினர். இதனால் ஆத்திரமடைந்த சீத்தாராமன் தகாத வார்த்தைகளால் திட்டி விமலாவை தாக்கினார்.  மேலும் இதனை தடுக்க முயன்ற விமாலாவின் மகன் மூவேந்தனையும் சீத்தாராமன் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து விமலா கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
Tags:    

Similar News