உள்ளூர் செய்திகள்
நன்னடத்தையை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்-போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
குற்ற வழக்குகளில் கைதானவர்கள் நன்னடத்தையை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்-போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு காா்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் இப்ராகிம் நகரைச் சோ்ந்தவா் முகமது ஜிப்ரி (வயது30). இவா் ஏற்கனவே பல வழக்குகளில் சிறை சென்றுள்ளாா். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நன்னடத்தை பிணைய பத்திரம் அளித்திருந்தாா்.
இந்த நிலையில் இவா் சித்தாா்கோட்டை சரவணகுமாா் (43) என்பவரை மிரட்டி கைப்பேசியைப் பறித்ததாக, சமீபத்தில் கைது செய்ய ப்பட்டாா். இவர் மீது ஏற்கனவே ஒரு ஆண்டுக்கான நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டுள்ள நிலையில், நன்னடத்தை பிணைய பத்திரத்தை மீறி குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து ஜிப்ரி கைது செய்யப்பட்டுள்ளார்.இனிவருங்காலங்களிலும் இது போன்ற நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டுள்ள நபர்கள், நன்னடத்தை பிணைய பத்திரத்தை மீறி குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை தொடரும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.