உள்ளூர் செய்திகள்
மருதாநல்லூரில் மனை உரிமையாளர்கள் சங்க கூட்டம் நடந்தது.
நீடாமங்கலம்:
கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் காவல் சரகத்திற்கு உட்பட்ட மருதாநல்லூரில் உள்ள கீரின்உட்ஸ் என்ற தனியார் மனை உரிமையாளர்கள் சங்கத்தின் ஆண்டு பொது க்குழு கூட்டம் கீரின்உட்ஸ் வளாகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சங்கத்தின் 2022-23ம் ஆண்டிற்கான புதிய பொறுப்பாளர்கள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்க ப்பட்டனர்.இதில் தலைவராக ஆனந்தன், செயலாளர் சரவணன், பொருளாளர் நரேந்திரன், இணை செயலாளர் ராமலிங்கம் மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கீரின்உட்ஸ் சங்கத்தினர் வாழ்த்து தெரிவித்தார்.