உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.

புதுச்சேரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா

Published On 2022-05-29 13:59 IST   |   Update On 2022-05-29 13:59:00 IST
புதுச்சேரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுவை மாநிலத்தில் 1060 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

இதில் 5 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுவையில் 2 பேர், ஏனாமில் 3 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

காரைக்கால், மாகியில் தொற்றால் பாதித்தவர் யாரும் இல்லை. தற்போது வரை கொரோனா தொற்று ஏற்பட்ட எவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவில்லை.

புதுவையில் 12 பேர், ஏனாமில் 7 பேர் என மொத்தம் 19 பேர் வீட்டுத் தனிமையில் உள்ளனர்.புதுவையை சேர்ந்த 2 பேர், ஏனாமை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 3 பேர் குணமடைந்துள்ளனர். 

புதுவை மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 65 ஆயிரத்து 854 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில்  1 லட்சத்து 63 ஆயிரத்து 873 பேர் குணமடைந்துள்ளனர். 

1962 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த தகவல்களை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News