உள்ளூர் செய்திகள்

களக்காடு சமையல் தொழிலாளி கொலையில் தலைமறைவான அ.தி.மு.க. நிர்வாகியை பிடிக்க தனிப்படை தீவிரம்

Published On 2022-05-27 15:07 IST   |   Update On 2022-05-27 15:07:00 IST
களக்காடு சமையல் தொழிலாளி கொலையில் தலைமறைவான அ.தி.மு.க. நிர்வாகியை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
களக்காடு:

களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் யாதவர் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 43). சமையல் தொழிலாளி. கடந்த 22-ம் தேதி மோட்டார் சைக்கிளில் வயலுக்குச் சென்ற போது அவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர்.

 இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதத்தில் முருகன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேர் கும்பலை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய சிங்கி குளத்தை சேர்ந்த ஐகோர்ட் ராஜா(34), ராமச்சந்திரன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் கோதைசேரியை சேர்ந்த சுரேஷ் என்ற சொக்கலிங்கம் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

இதையடுத்து இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபரான அ.தி.மு.க. பிரமுகர் வானமாமலை என்ற சுரேஷ் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.

அவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News