உள்ளூர் செய்திகள்
நெல்லையில் 27-ந் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்
நெல்லையில் 27-ந் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
நெல்லை:
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 2-ம் மற்றும் 4-ம் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படுகிறது.
அதன்படி இந்த வாரம் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.
இம்முகாமில் பணி நியமனம் பெறும் பதிவுதாரர்களுடைய வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் தங்களது கல்வி சான்று மற்றும் இதர சான்றுகளுடன் பங்கேற்று பயனடையலாம்.
இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலை நாடுநர்கள் மற்றும் பங்கேற்க விருப்பம் உள்ள தனியார் நிறுவனங்கள் தனியார் வேலை இணையத்தில் (www.tnprivatejobs.tn.gov.in) தங்களது விபரங்களை பதிவு செய்தல் வேண்டும்.
மேலும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குனர் பேச்சியம்மாள் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 2-ம் மற்றும் 4-ம் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படுகிறது.
அதன்படி இந்த வாரம் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.
இம்முகாமில் பணி நியமனம் பெறும் பதிவுதாரர்களுடைய வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் தங்களது கல்வி சான்று மற்றும் இதர சான்றுகளுடன் பங்கேற்று பயனடையலாம்.
இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலை நாடுநர்கள் மற்றும் பங்கேற்க விருப்பம் உள்ள தனியார் நிறுவனங்கள் தனியார் வேலை இணையத்தில் (www.tnprivatejobs.tn.gov.in) தங்களது விபரங்களை பதிவு செய்தல் வேண்டும்.
மேலும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குனர் பேச்சியம்மாள் தெரிவித்துள்ளார்.