உள்ளூர் செய்திகள்
மாட்டை அழைத்து சென்ற சிறுவன் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலூர்
அழகர் கோவில் கோட்டைவாசல் பகுதியை சேர்ந்த அம்மாசி. வேன் டிரைவர். இவரது மனைவி சுனிதா.
இந்த தம்பதியினருக்கு 2 மகள், 1 மகன் உள்ளனர். நேற்று இரவு 7 மணியளவில் மழை பெய்தது. இதனால் மாட்டை பிடித்து கட்டுவதற்காக வீட்டுக்கு வெளியே அம்மாசி, மனைவி சுனிதா, மகன் அர்ஜூன் (6) ஆகியோர் சென்றனர்.
அப்போது பயங்கர சத்தத்துடன் மின்னல் தாக்கியதில், 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் அம்மாசியும், சுனிதாவும் காயமின்றி தப்பினர். சிறுவன் அர்ஜூன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இதுகுறித்து மேலவளவு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.