உள்ளூர் செய்திகள்
சிறுவன் அர்ஜூன்

மின்னல் தாக்கி பலியான சிறுவன்

Published On 2022-05-25 08:26 GMT   |   Update On 2022-05-25 08:26 GMT
மாட்டை அழைத்து சென்ற சிறுவன் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலூர்

அழகர் கோவில் கோட்டைவாசல் பகுதியை சேர்ந்த அம்மாசி.  வேன் டிரைவர். இவரது மனைவி சுனிதா. 

இந்த தம்பதியினருக்கு 2 மகள், 1 மகன் உள்ளனர்.   நேற்று இரவு 7 மணியளவில் மழை பெய்தது. இதனால் மாட்டை பிடித்து கட்டுவதற்காக வீட்டுக்கு வெளியே அம்மாசி, மனைவி சுனிதா, மகன்  அர்ஜூன் (6) ஆகியோர் சென்றனர்.

 அப்போது  பயங்கர சத்தத்துடன் மின்னல் தாக்கியதில்,  3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் அம்மாசியும், சுனிதாவும் காயமின்றி தப்பினர். சிறுவன் அர்ஜூன் பரிதாபமாக உயிரிழந்தான். 

இதுகுறித்து மேலவளவு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.
Tags:    

Similar News