உள்ளூர் செய்திகள்
கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் திடீர் வாகன சோதனை நடத்தினர்.
புதுச்சேரி:
திருக்கனூர் பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் திருக்கனூர் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் நேற்று இரவு திருக்கனூர் கடை வீதியில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இருசக்கர வாகனத்தில் வந்த சந்தேகத்துக்கிடமான நபர்கள் ஏதேனும் கஞ்சாவை மறைத்து வைத்திருக்கிறார்களா? என அவர்களிடமும், வாகனத்திலும் சோதனை மேற்கொண்டனர். இதனால் கடைவீதியில் பரபரப்பு ஏற்பட்டது.