உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

டிரைவருக்கு பீர் பாட்டில் குத்து

Published On 2022-05-24 09:20 GMT   |   Update On 2022-05-24 09:20 GMT
சாராயக்கடையில் ஏற்பட்ட தகராறில் டிரைவருக்கு பீர் பாட்டில் குத்து விழுந்தது.
புதுச்சேரி, மே.24-

காட்டேரிக்குப்பம் அருகே குமாரபாளையம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் வைத்தீஸ்வரன் (வயது46). கூலி தொழிலாளி. மது குடிக்கும் பழக்கமுள்ள இவர் தினமும் குமாரபாளையம் சாராயக்கடைக்கு சென்று சாராயம் குடிப்பது வழக்கம்.

அதுபோல்சா ராயக்கடைக்கு வைத்தீஸ்வரன் சென்றார். அப்போது ஏற்கனவே அங்கு சாராயம் குடித்துக்கொண்டிருந்த பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த மஞ்சினி என்பவர் வைத்தீஸ்வரனை அழைத்து இருவரும் ஒன்றாக சாராயம் குடிக்கலாம் என்றார். ஆனால் வைத்தீஸ்வரன் இதனை ஏற்கவில்லை. எப்போதும் போல் நான் தனியாகவே குடித்து கொள்கிறேன் என்று கூறினார்.

பின்னர் வைத்தீஸ்வரன் சாராயம் குடித்துக் கொண்டிருந்த போது அவரிடம் மஞ்சினி தொடர்ந்து வீண் தகராறு செய்தார்.  தகாத வார்த்தைகளால் திட்டிய மஞ்சினி என்னோடு சாராயம் குடிக்க மாட்டாயா என கூறியபடி வைத்தீஸ்வரனை கன்னத்தில் அறைந்து கீழே பிடித்து தள்ளினார்.

இதையடுத்து வீண் தகராறு செய்வதை அறிந்த வைத்தீஸ்வரன் அங்கிருந்து வீட்டுக்கு செல்ல எண்ணி நடந்து வந்து கொண்டிருந்தார். ஆனால் பின்தொடர்ந்து வந்த மஞ்சினி திடீரென வைத்தீஸ்வரனை வழிமறித்து என்னிடமே பகைத்துக் கொள்கிறாயா என கூறியப்படி மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலை எடுத்து வைத்தீஸ்வரனின் முகத்தில் குத்தினார். மீண்டும் குத்த முயன்ற போது அதனை வைத்தீஸ்வரன் கையால் தடுத்தார்.

உடனே வைத்தீஸ்வரன் அலறல் சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்ததால் மஞ்சினி அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

இந்த தாக்குதலில் ரத்தகாயமடைந்த வைத்தீஸ்வரன் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று பின்னர் இதுகுறித்து வைத்தீஸ்வரன் காட்டேரிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மஞ்சினியை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News