உள்ளூர் செய்திகள்
தற்கொலை

கடன் தொல்லையால் வீடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை

Published On 2022-05-24 09:05 GMT   |   Update On 2022-05-24 09:05 GMT
கடன் தொல்லையால் மனவேதனை அடைந்த வாலிபர் வீடியோ வெளியிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொளத்தூர்:

வில்லிவாக்கத்துக்கு அருகே உள்ள தாதங்கும் பகுதியை சேர்ந்தவர் மாரி (வயது 28). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். அவரால் பணத்தை திருப்பி கட்ட முடியவில்லை. இதனால் பணம் கொடுத்தவர் நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது.

இதனால் மனவேதனை அடைந்த மாரி வீடியோவில் பேசி அதனை நண்பர்களுக்கு அனுப்பிவிட்டு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ராஜமங்கலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News