உள்ளூர் செய்திகள்
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஊர்வலம்
மனைப்பட்டா கேட்டு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஊர்வலம் நடத்தினர்.
புதுச்சேரி:
புறம்போக்கு இடங்களில் வசிப்போருக்கும், வாடகை வீட்டில் வசிப்போருக்கும் குடிமனை பட்டா வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் 3 இடங்களில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுவை சாரம் அவ்வை திடலில் இருந்து கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்துக்கு நகர செயலாளர்கள் ராம்ஜி, மதிவாணன் ஆகியோர் தலைமை தாங்கினர். மூத்த தலைவர் முருகன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
ஊர்வலத்தில் பிரதேசக்குழு செயலாளர் ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர்கள் சுதா, கொளஞ்சியப்பன், கலியமூர்த்தி, பிரபுராஜ், சத்யா பிரதேசக்குழு உறுப்பினர்கள் சரவணன், ஆனந்து, ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஊர்வலம் வழுதாவூர் ரோட்டில் உள்ள கலெக்டர் அலுவலகத்தை அடைந்தது.
பின்னர்அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பாகூர் தாசில்தார் அலுவலகம் முன்பு மார்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் இலவச வீட்டு மனைபட்டா வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு பாகூர் செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். பிரதேச குழு உறுப்பினர் இளவரசி, செயற்குழு உறுப்பினர் பெருமாள், வடிவேலு கவுசிகன், முருகையன், வெங்கடாசலம், ஹரிதாஸ், சதாசிவம் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
பாகூர் கொம்யூனில் பல ஆண்டுகளாக கோவில் இடம், அரசு இடத்தில் வாழ்ந்து வரும் மக்களுக்கு அதே இடத்தை வகை மாற்றம் செய்து குடிமனைப்பட்டா வழங்க வேண்டும்.
நீர்நிலை அருகில், வாடகை வீடு ஆகிய பகுதிகளில் வேறு வழியின்றி வறுமையில் வாழ்ந்து வரும் ஏழை எளிய மக்கள் வீடுகட்டி வாழ புதிய இடம் தேர்வு செய்து குடி மனைப்பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதேபோல வில்லியனூரிலும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் குடிமனை பட்டா கேட்டு ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.