உள்ளூர் செய்திகள்
வழக்கு

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்ற 16 வயது சிறுமி

Published On 2022-05-23 07:33 GMT   |   Update On 2022-05-23 07:33 GMT
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் 16 வயது சிறுமி குழந்தை பெற்றார்.
விருதுநகர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி 8-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது அவரது பெற்றோர் இறந்துவிட்டனர். இதனால் படிப்பை பாதியில் நிறுத்திய அந்த சிறுமி அதே பகுதியில் உள்ள சோப்பு கம்பெனியில் வேலைக்குச் சென்றார்.

அப்போது அந்த சிறுமிக்கும் அங்கு வேலை பார்த்த மிஷின் ஆபரேட்டர் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கோட்டையூரைச் சேர்ந்த அழகுராஜா என்பவ ருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.

இதையடுத்து அழகுராஜா அந்த சிறுமியை தனது ஊருக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தினார். இதில் அந்த சிறுமி கருவுற்றாள். இந்த நிலையில் பிரசவத்துக்காக அந்த சிறுமி சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில்  அனுமதிக்கபட்டார். அங்கு டாக்டர்கள் விசாரித்தபோது கருவுற்ற சிறுமிக்கு 16 வயது என தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் புகார் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் விசாரணை செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் சிறுமியை சட்டவிரோதமாக திருமணம் செய்த அழகுராஜா மீது போக்சோ, குழந்தைகள் திருமண தடைச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே பிரசவத்திற்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
Tags:    

Similar News