உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

மக்களை பிரிக்க தி.மு.க. சூழ்ச்சி- அ.தி.மு.க.குற்றச்சாட்டு

Published On 2022-05-22 14:04 IST   |   Update On 2022-05-22 14:04:00 IST
அரசியல் ஆதாயத்திற்காக புதுவை மக்களை பிரிக்க தி.மு.க. சூழ்ச்சி என்று அ.தி.மு.க. குற்றச்சாட்டுகிறது.
புதுச்சேரி:

புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில், அவரே நடித்துள்ள நெஞ்சிக்கு நீதி என்ற திரைப்படத்திற்காக வரிவிலக்கு வழங்க  முதல்அமைச்சரிடம் தி.மு.க. அளித்த மனுவில்  புதுவை மாநிலத்தில் இன்னமும் சாதி வெறியின் காரணமாக ஏற்றத் தாழ்வுகள் இருந்து வருகிறது என  குறிப்பிட்டிருப்பதை அ.தி.மு.க. சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.இது புதுவை மாநிலத்தை சாதி ரீதியில் திட்டமிட்டு கலங்கப்படுத்தும் செயலாகும். 

வரி விலக்குக்காக இதுபோன்ற கருத்துக்களை தி.மு..க முன்னெடுத்து வைப்பது  தவறான ஒன்றாகும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி சாதி, மதம், இனம், பாலினம், பிறப்பிடம், வாழ்வியல் அடிப்படையில் புதுவை மாநிலத்தில் எங்கேயாவது பாகுபாடு நிலவுகிறதா? அப்படி இல்லாத ஒரு சூழ்நிலையில் மக்களிடையே சாதி ரீதியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்த தி.மு.க. முற்பட வேண்டிய அவசியம் என்ன ? தங்களுடைய அரசியல் ஆதாயத்திற்காக சாதி ரீதியில் மக்களை பிரித்தாளும் தி.மு.க.வின் சூழ்ச்சியை அரசு முறியடிக்க வேண்டும். 

6 எம்.எல்.ஏ.க்கள் உள்ள தி.மு.க. என்றைக்காவது தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக குரல் கொடுத்தது உண்டா? அவர்களுடைய வாழ்க்கைத் தரம் உயர எந்த திட்டத்தையாவது அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றது உண்டா? 

அருந்ததிய மக்களுக்கு தனி உள் ஒதுக்கீடு, கிராமப்பகுதியில் வறுமையில் வாடும் தாழ்த்தப்பட்ட மக்களுடைய நலனுக்காக மின் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை, குப்பை வரி,வீட்டு வரி,குடிநீர் வரியில் குறைப்பு கேட்காத தி.மு.க. தனது கட்சி தலைவரின் மகன் நடித்த ஒரு படத்துக்காக வரிந்து கொண்டு அதுவும் அட்டவணை இன மக்களை அரணாக குறிப்பிட்டு வரிவிலக்கு கேட்பது எந்த விதத்தில் நியாயம்.?

தி.மு..க எம்.எல்.ஏ.க்களின் வரிவிலக்கு கோரிக்கையை முதல்அமைச்சர் ஏற்றுக் கொள்ளக் கூடாது. அப்படி ஏற்று க்கொண்டால் இது மற்ற அனைத்து நிகழ்வுக ளுக்கும் ஒரு முன்னுதாரணமாக மாறிவிடும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News