உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

பெண் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2022-05-22 05:34 GMT   |   Update On 2022-05-22 05:34 GMT
நெட்டப்பாக்கம் அருகே பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:

நெட்டப்பாக்கம் அருகே எம்.குச்சிப்பாளையம் யோகபிரியா நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி(வயது62). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தனபாக்கியம்  என்பவருக்கும் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு அய்யப்பன் என்ற மகன் உள்ளார்.

குழந்தை பிறந்த பிறகு தனபாக்கியம் பொன்னுசாமியை விட்டு பிரிந்து சென்று விட்டார். அதன்பிறகு பொன்னுசாமி அதே பகுதியை சேர்ந்த திருமணமான மல்லிகா என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார்

பொன்னுசாமி கட்டிட வேலைக்கு சென்று வந்தார். மல்லிகா வீட்டில் உள்ள ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று அவைகளை கவனித்து வந்தார். மல்லிகாவுக்கு அடிக்கடி தலைவலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதற்காக அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் வழக்கம் போல் பொன்னுசாமி கட்டிட வேலைக்கு சென்று விட்டார். அதன் பிறகு மல்லிகா ஆடு, மாடுகளை வயல்வெளிக்கு மேய்ச்சலுக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு தீராத தலைவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால்  வயல்வெளியில் இருந்து ஆடு, மாடுகளை மதியமே வீட்டுக்கு கொண்டு வந்து கொட்டகையில் அடைத்தார்.

இதன் பின்னர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த மல்லிகா மின்விசிறியில் ஆடு கட்டும் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலையில் வீடு திரும்பிய பொன்னுசாமி மல்லிகா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இதுகுறித்து மடுகரை புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News