உள்ளூர் செய்திகள்
மாயம்

சிதம்பரத்தில் பெண் மாயம்- போலீசார் விசாரணை

Published On 2022-05-21 10:37 GMT   |   Update On 2022-05-21 10:37 GMT
சிதம்பரத்தில் பெண் மாயமானது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிதம்பரம்:

சிதம்பரம் பாரதி தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை, அவரது மனைவி காவிரி (வயது 50). இவர் தனியார் நர்சிங் ஹோமில் வேலை செய்து வருகிறார்.

கடந்த 16-ந் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டவர் இதுவரை காணவில்லை. இதுகுறித்து சிதம்பரம் டவுன் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News