உள்ளூர் செய்திகள்
மனைவி கண்முன் கணவரை தாக்கிய 4 பேர் கும்பல்

கடலூர் அருகே மனைவி கண்முன் கணவரை தாக்கிய 4 பேர் கும்பல்

Published On 2022-05-21 10:18 GMT   |   Update On 2022-05-21 10:18 GMT
கடலூர் அருகே தொழிலாளியை 4 பேர் கொண்ட கும்பல் தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:

கடலூர் அருகே தூக்கணாம்பாக்கம் மேல் அழிஞ்சுபட்டு பகுதியை சேர்ந்தவர் பற்குணன் (வயது 44). இவர் சம்பவத்தன்று தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது தென்னம்பாக்கம் காலனி பகுதியில் 4 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனால் மோட்டார் சைக்கிள் சென்ற பற்குணன் செல்ல முடியாமல் இருந்ததால் அவர்களிடம் செல்வதற்கு வழி விட வேண்டும் என கேட்டபோது, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த 4 பேரும் பற்குணனை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பற்குணன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து தூக்கணாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பற்குணன் கொடுத்த புகாரின் பேரில் நந்தகுமார், ஞானவேல் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News