உள்ளூர் செய்திகள்
கைது

சிதம்பரம் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை- வாலிபர் கைது

Published On 2022-05-21 15:44 IST   |   Update On 2022-05-21 15:44:00 IST
சிதம்பரம் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிதம்பரம்:

சிதம்பரம் அருகே பழையநல்லூர் சாலையந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கவிதா(17) பெயர் மாற்றப்பட்டுள்ளது. அதே பகுதியில் வசித்து வரும் வீரசெல்வம். கடந்த 6 மாதமாக கவிதாவிற்கு அந்த வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனையடுத்து கவிதாவின் தாய் ரேவதி சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் அந்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Similar News