உள்ளூர் செய்திகள்
நெய்வேலியில் என்எல்சி தொழிலாளி மனைவி தற்கொலை
நெய்வேலியில் என்எல்சி தொழிலாளி மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெய்வேலி:
நெய்வேலி புதுநகர் 27-வது வட்டம் இத்தாலியன் ரோடு, என்எல்சி குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் ரெங்கசாமி. இவர் என்எல்சி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அலமேலு (வயது 47). இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.
சம்பவத்தன்று நேற்று வீட்டில் ரங்கசாமி இல்லாத நேரத்தில் மன உளைச்சலில் இருந்த அலமேலு வீட்டின் எதிரில் உள்ள கொட்டகைக்கு சென்று அங்கு இருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த ரெங்கசாமி அதிர்ச்சி அடைந்து நெய்வேலி தெர்மல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்த நெய்வேலி தெர்மல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெய்வேலி புதுநகர் 27-வது வட்டம் இத்தாலியன் ரோடு, என்எல்சி குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் ரெங்கசாமி. இவர் என்எல்சி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அலமேலு (வயது 47). இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.
சம்பவத்தன்று நேற்று வீட்டில் ரங்கசாமி இல்லாத நேரத்தில் மன உளைச்சலில் இருந்த அலமேலு வீட்டின் எதிரில் உள்ள கொட்டகைக்கு சென்று அங்கு இருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த ரெங்கசாமி அதிர்ச்சி அடைந்து நெய்வேலி தெர்மல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்த நெய்வேலி தெர்மல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.