உள்ளூர் செய்திகள்
ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்துக்கு புதுவை இளைஞர் காங்கிரசார் நினைவு ஜோதி ஏந்தி சென்றனர்.

இளைஞர் காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தி நினைவு ஜோதி

Published On 2022-05-21 09:54 GMT   |   Update On 2022-05-21 09:54 GMT
ராஜீவ்காந்தி நாளையொட்டி இளைஞர் காங்.சார்பில் நினைவு ஜோதி ஏந்திச் சென்றனர்.
புதுச்சேரி:

ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்துக்கு புதுவை இளைஞர் காங்கிரசார் நினைவு ஜோதி ஏந்திச் சென்றனர்.

புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் வேல்முருகன் தலைமையில் ராஜீவ்காந்தி நினைவு தீப ஜோதியினை ஸ்ரீபெரும்புத்தூருக்கு ஏந்தி சென்றனர்.
அவர்களுடன் புதுவை மாநில  ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், காங்கிரஸ் வழக்கீல் பிரிவு தலைவர் மருதுபாண்டியன் இந்திரா நகர் தொகுதி பொறுப்பாளர் ராஜாகுமார் மற்றும் நிர்வாகி சோமசுந்தரம், மகிளா காங்கிரஸ் நிர்வாகி விஜயகுமாரி மற்றும் சேவாதளம் தலைவர்கள், நிர்வாகிகள் ஆகியோர் சென்றனர்.
Tags:    

Similar News