உள்ளூர் செய்திகள்
ராஜீவ்காந்தி சிலைக்கு ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி.

ராஜீவ்காந்தி சிலைக்கு ரங்கசாமி-நாராயணசாமி மாலை

Published On 2022-05-21 09:45 GMT   |   Update On 2022-05-21 09:45 GMT
ராஜீவ்காந்தி சிலைக்கு ரங்கசாமி-நாராயணசாமி மாலை அணிவித்தனர்.
புதுச்சேரி:

மறைந்த பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவுதினம் இன்று புதுவை அரசு சார்பில் அனுஷ்டிக்கப்பட்டது. இதையாட்டி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

மேலும் அமைச்சர் லட்சுமிநாராயணன், துணை–சபாநாயகர் ராஜவேலு,  எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.பி.  ரமேஷ், லட்சுமிகாந்தன், தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன் மற்றும் பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
தொடர்ந்து சர்வமத பிரார்த்தனை நடந்தது. வன்முறை எதிர்ப்பு உறுதிமொழியை ரங்கசாமி வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். 

புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில் ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., சட்டமன்ற கட்சித்தலைவர் வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், கார்த்திகேயன், நீல.கங்காதரன், சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், காங்கிரஸ் நிர்வாகிகள் கருணாநிதி, தனுசு, ஆர்.இ.சேகர், வக்கீல் மருதுபாண்டி, கணேசன், கோவிந்தராஜ், வீரமுத்து, ரகுமான் உள்பட பலர் பங்கேற்றனர். 
முன்னதாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ராஜீவ்காந்தி உருவப்படத்துக்கு காங்கிரசார் மலரஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து 3 பஸ்களில் ஸ்ரீபெரும்புதூர் நினைவிடத்திற்கு சென்று புதுவை காங்கிரசார் அஞ்சலி செலுத்தினர்.

அரியாங்குப்பம் வட்டார  காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தின நிகழ்ச்சி  அரியாங்குப்பம்- வீராம்பட்டினம் ரோடு சந்திப்பில் நடந்தது.

நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், காங்கிரஸ் மாநில பொது செயலாளர் சங்கர், வட்டார தலைவர்கள் அய்யப்பன், சிவராமகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு ராஜீவ் காந்தி உருவ படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

மணவெளி தொகுதி காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி உருவ படத்துக்கு முன்னாள் அரசு கொறடா அனந்தராமன்மலர் அஞ்சலி செலுத்தினார். 
நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் செயலாளர் சுரேஷ்குமார், வட்டார காங்கிரஸ் தலைவர்பரமகுரு, மாநில பொறுப்பாளர்கள் பாலு, ரவி, குமார், கோவிந்தசாமி மற்றும்  காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News