உள்ளூர் செய்திகள்
திட்டக்குடி அருகே சிறுமியை கடத்தி சென்ற வாலிபர்
திட்டக்குடி அருகே 11-ம் வகுப்பு மாணவியை கடத்தியது தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திட்டக்குடி:
திட்டக்குடி அருகே பட்டூர் சேர்ந்த தர்மலிங்கம் விவசாயி. இவரது மகள் அனுசுயா. இவர் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு தனது குடும்பத்துடன் சாப்பிட்டு விட்டு உறங்கி உள்ளனர். மறுநாள் காலை பார்த்த போது உறங்கிகொண்டு இருந்த அனுசுயாவை காணவில்லை.
காணமல் போன அனசுயாவை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. மேலும் அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் அனுசுயாவை பட்டூரை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சிரஞ்சீவி (25)என்பவர் கடத்தி சென்றதாக தெரிந்தது.
இதுகுறித்து தர்மலிங்கம் தனது மகளை மீட்டு தருமாறு ஆவினங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்குபதிவு செய்து அனுசுயாவை கடத்தி சென்ற சிரஞ்சீவியை வலைவீசி தேடி வருகின்றனர்.
திட்டக்குடி அருகே பட்டூர் சேர்ந்த தர்மலிங்கம் விவசாயி. இவரது மகள் அனுசுயா. இவர் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு தனது குடும்பத்துடன் சாப்பிட்டு விட்டு உறங்கி உள்ளனர். மறுநாள் காலை பார்த்த போது உறங்கிகொண்டு இருந்த அனுசுயாவை காணவில்லை.
காணமல் போன அனசுயாவை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. மேலும் அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் அனுசுயாவை பட்டூரை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சிரஞ்சீவி (25)என்பவர் கடத்தி சென்றதாக தெரிந்தது.
இதுகுறித்து தர்மலிங்கம் தனது மகளை மீட்டு தருமாறு ஆவினங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்குபதிவு செய்து அனுசுயாவை கடத்தி சென்ற சிரஞ்சீவியை வலைவீசி தேடி வருகின்றனர்.