உள்ளூர் செய்திகள்
பேரறிவாளன் விடுதலையை கண்டித்து கரூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்ற போது எடுத்த படம்.

பேரறிவாளன் விடுதலையை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

Published On 2022-05-20 09:20 GMT   |   Update On 2022-05-20 09:20 GMT
கரூரில் பேரறிவாளன் விடுதலையை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
கரூர்:

கரூர் ஆர்.எம்.எஸ். தபால் அலுவலகம் முன் மாவட்ட காங்கிரஸ் சார்பில் பேரறிவாளன் விடுதலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. 

இதில் முன்னால் மாவட்ட காங்கிரஸ் தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான பேங்க் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். 

கரூர் வடக்கு நகர காங்கிரஸ் தலைவரும், 9-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான ஸ்டீபன் பாபு முன்னிலை வகித்தார்.  

காங்கிரஸார் முகத்தில் வெள்ளை துணி அணிந்து வாயைக் கட்டிக் கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாநில சேவா தள செயலாளர் ஆடிட்டர் ரவிசந்திரன், காங்கிரஸ் மாவட்ட சேவா தள தலைவர் தாந்தோணி குமார்,  துணைத்தலைவர்கள் சின்னையன், நாகேஸ்வரன், எஸ் சி எஸ் டி தலைவர் முனீஸ்வரன்  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News