உள்ளூர் செய்திகள்
100 நாள் வேலைக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது.

அடையாள அட்டை வழங்கல்

Published On 2022-05-20 14:44 IST   |   Update On 2022-05-20 14:44:00 IST
ஆலத்தூர் ஊராட்சியில் 100 நாள் வேலைக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சியில் 100 நாள் வேலை பணியாளர்களுக்கு 2022-23-ம் ஆண்டுக்கான 100 நாள் வேலைக்கான அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு ஊராட்சிமன்ற தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார்.

இதில் ஆலத்தூர், அருள்மொழிதேவன் பகுதியை சேர்ந்த 280 குடும்பத்தைச் சேர்ந்த 750-க்கும் மேற்பட்டவர்களுக்கு 100 நாள் வேலைக்கான அட்டை வழங்கப்பட்டது.இதில் ஊராட்சி செயலாளர் தமிழ்மணி, ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News