உள்ளூர் செய்திகள்
இயற்கை உரத்திற்காக வயல்களில் மாடுகளை கிடைகட்டி உள்ளனர்.

வயல்களில் ஆடு, மாடு கிடை - விவசாயிகள் ஆர்வம்

Published On 2022-05-20 09:10 GMT   |   Update On 2022-05-20 09:10 GMT
வேதாரண்யம் பகுதியில் இயற்கை உரத்திற்காக வயல்களில் ஆடு, மாடு கிடை அமைக்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் பகுதியில் இயற்கை உரத்துக்கு வயல்களில் ஆடு மாடு கிடை அமைக்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர் இதன் மூலம் மண்ணின் வளத்தைப் பெருக்கி இயற்கையான நஞ்சில்லா உணவு தானியங்களை உற்பத்தி செய்ய விவசாயிகள் முயற்சி செய்து வருகின்றார்கள் வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் மூலக்கரை மருதூர் தகடூர் பிராந்தியங்கரை தென்னடார் உம்பளச்சேரி வாட்டாகுடி தலைஞாயிறு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கரில் விளை நிலங்கள் உள்ளன.

இதில் ஆண்டுதோறும் மழையை மட்டுமே நம்பி ஒரு போக சம்பா சாகுபடி நடைபெறும் வயல்கள் 11,000 ஹெக்டரும் ஆற்றுப் பாசனத்தை நம்பி 14 ஆயிரம் ஹெக்டரும் நெல்சாகுபடி வயல்கள் உள்ளன.

 இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் பல ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை உரத்தை மட்டுமே வயலுக்கு பயன்படுத்தி வந்தனர் சமீபகாலமாக முற்றிலும் மாறுபட்டு செயற்கை உரங்களைப் பயன்படுத்தி அதிக மகசூல் பெற்றனர் நாளடைவில் ரசாயன உரங்கள் மண்ணுக்கும் மனிதனுக்கும்கேடு விளைவிக்கும் என்பதை உணர்ந்த விவசாயிகள் மீண்டும் பழையபடி இயற்கை உரத்திற்கு மாறி வருகின்றனர்.

இயற்கை உரத்திற்காக வயல்களில்ஆடு மாடுகளை கொண்டு கிடை போடுவதில் தற்போது இப்போது விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 இதன் மூலம் மண்ணின் வளத்தையும் பெருக்கும் மனிதர்களுக்கு நஞ்சில்லா உணவு தானியங்கள் கிடைக்க இப்பகுதி விவசாயிகள் முயற்சி செய்து வருகிறார்கள்.

இந்த பகுதியில் ஒரு ஏக்கர் நிலத்திற்கு மூன்று முறை மாடுகளையும் இரண்டு முறை ஆடுகளையும் விவசாயிகள் கடை போட்டு வருகிறார்கள் பெரும்பாலான விவசாயிகள் இயற்கை உரத்திற்கு மாறுவதால் தரமான உணவு தானியங்கள் கிடைக்கும் என இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Tags:    

Similar News