உள்ளூர் செய்திகள்
சேத்தியாத்தோப்பு அருகே தடுப்பு சுவரில் கார் மோதி சிற்பி பலி
சேத்தியாத்தோப்பு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதிய விபத்தில் சிற்பி சம்பவ இடத்திலேயே பலியானார்.
சேத்தியாத்தோப்பு:
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் காமராஜர் நகரை சேர்ந்தவர் பாலமுத்து (வயது 19) சிற்பியாக உள்ளார். இவர் உள்பட 4 பேர் திருத்துறை பூண்டியில் உள்ள கோவிலில் சிற்ப வேலைக்காக காரில் நேற்று மாலை புறப்பட்டு சென்றனர்.
இந்த கார் சேத்தியாத்தோப்பு அருகே நந்தீஸ்வரமங்கலம் பகுதியில் சென்றது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டுஓடி தடுப்புசுவரில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பாலமுத்து சம்பவ இடத்தில் உடல் நசுங்கி பலியானார். காரில் வந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து சோழத்தரம் போலீசார் வழக்குபதிவு செய்தனர். விபத்தில் பலியான பாலமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.