உள்ளூர் செய்திகள்
பண்ருட்டியில் கல்லூரிக்கு சென்ற மாணவி திடீர் மாயம்
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கல்லூரிக்கு சென்ற மாணவி திடீரென மாயமானது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கீழிலிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அனுசுயா (வயது 20). இவர் கடலூர் செம்மண்டலத்தில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 17-ந்தேதி அனுசுயா கல்லூரிக்கு சென்றார். அதன்பின்னர் இரவு நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அனுசுயாவை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பெற்றோர் காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து அனுசுயா என்ன ஆனார்? எங்கு சென்றார்? கடத்தப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கீழிலிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அனுசுயா (வயது 20). இவர் கடலூர் செம்மண்டலத்தில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 17-ந்தேதி அனுசுயா கல்லூரிக்கு சென்றார். அதன்பின்னர் இரவு நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அனுசுயாவை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பெற்றோர் காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து அனுசுயா என்ன ஆனார்? எங்கு சென்றார்? கடத்தப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.