உள்ளூர் செய்திகள்
20 தனியார் பஸ்களில் ஏர் ஹாரன்கள் பறிமுதல்

பண்ருட்டியில் 20 தனியார் பஸ்களில் ஏர் ஹாரன்கள் பறிமுதல்

Published On 2022-05-19 16:49 IST   |   Update On 2022-05-19 16:49:00 IST
பண்ருட்டி மோட்டார் வாகன ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள் பண்ருட்டி பஸ்நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் ஆய்வு செய்தனர்.
பண்ருட்டி:

பண்ருட்டி நகரில் இயக்கப்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பொருத்தப்பட்டு இருப்பதாகவும், பள்ளி கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அருகில் சென்று. இந்த ஏர்ஹாரன்களை ஒலிக்கச் செய்வதால் மக்கள் பாதிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்தது. கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர் உத்தரவின்பேரில் பண்ருட்டி மோட்டார் வாகன ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள் பண்ருட்டி பஸ்நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் ஆய்வு செய்தனர்.

அப்போது பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களை அகற்றினர். ஒட்டு மொத்தமாக 20 தனியார் மற்றும் அரசு பஸ்களில் இருந்த ஏர்ஹாரன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இது போன்ற ஏர்ஹாரன்களை பயன்படுத்தக்கூடாது என டிரைவர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Similar News