உள்ளூர் செய்திகள்
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கண்டன ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பெண் நிர்வாகிகள் மீது அவதூறு பரப்பியவர்களை கைது செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு 4 முனை சந்திப்பில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பெண் நிர்வாகிகள் மீது அவதூறு பரப்பியவர்களை கைது செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மண்ணாடிப்பட்டு கொம்யூன் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கொம்யூன் செயலாளர் அன்புமணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் சுதா சுந்தரராமன், பிரதேச குழு செயலாளர் ராஜாங்கம், பிரதேச செயற்குழு உறுப்பினர் பெருமாள், சீனுவாசன், சத்தியா, பிரதேச குழு சங்கர், வக்கீல் தட்சிணாமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் திருபுவனை தொகுதி செயலாளர் ஈழவளவன், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை தொகுதி அமைப்பாளர் தமிழ்க் கனல், தொகுதி துணைச் செயலாளர் சிந்தனைச்செல்வன் மற்றும் புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் கொம்யூன் செயலாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.