உள்ளூர் செய்திகள்
ரூ.75 லட்சம் செலவில் பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள்
பாகூர் தொகுதியில் ரூ.75 லட்சம் செலவில் பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளது.
புதுச்சேரி:
பாகூர் தொகுதி பொதுப்பணித்துறை சார்பில் இருளன்சந்தை பகுதியில் அமைந்துள்ள அரசு தொடக்கப் பள்ளியின் கட்டிட புனரமைக்கும் மற்றும் இடிந்து விழுந்த மதில் சுவரை மீண்டும் கட்டுவதற்காக ரூ.28 லட்சத்தில் மதிப்பீடு தயாரித்து, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதையடுத்து, மதில்சுவர் மற்றும் கட்டிடம் சீரமைக்கும் பணியை செந்தில்குமார் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இதேபோல் பாகூர்பேட் அரசு ஆரம்ப பள்ளியில் இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை கட்டுவதற்காக ரூ.8 லட்சமும், பாகூர் பாரதி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.8 லட்சம் மதிப்பில் நடைபாதை அமைப்பதற்கும், கொரவள்ளிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.31 லட்சம் மதிப்பில் கழிவறை மேம்படுத்துவதற்காக பணியும் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.75 லட்சம் ஆகும்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஸ்ரீதர், கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி, கல்வித்துறை துணை ஆய்வாளர் பக்கிரிசாமி, உதவி பொறியாளர் விக்டோரியா, தி.மு.க. பிரமுகர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.