உள்ளூர் செய்திகள்
வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை வழங்கப்பட்ட காட்சி.

எம்.ஐ.டி.கல்லூரியில் கால்பந்து போட்டி

Published On 2022-05-19 14:04 IST   |   Update On 2022-05-19 14:04:00 IST
எம்.ஐ.டி.கல்லூரியில் நடைபெற்ற கால்பந்து போட்டி செயின்ட் ஜோசப் கல்லூரி அணி முதல் பரிசு பெற்றது.
புதுச்சேரி:

மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி) கல்லூரியில், 5-ம் ஆண்டு ஸ்டெல்லர் கோப்பை கால்பந்து போட்டி புதுவை மற்றும் தமிழகத்தை சேர்ந்த கல்லூரிகளுக்கு இடையில் 2 நாட்கள் நடைபெற்றது.

இப்போட்டியை மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறையின் 2017-ம் ஆண்டு பட்டம் பெற்ற மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான தனசேகரன், துணை தலைவர் சுகுமாரன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி, கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர். 

சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் வல்லவன் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். இதில் புதுவை மற்றும் தமிழக கல்லூரிகளை சேர்ந்த 32 அணிகள் பங்கேற்றன.

இறுதி போட்டியில் ஆண்கள் பிரிவில் கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரி முதல் பரிசும், புதுவை மாஸ் காலேஜ் ஆப் பிஸிக்கல் எஜூகேஷன் 2-ம் பரிசும், தாகூர் கலை கல்லூரி 3-ம் பரிசும், மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி 4-ம் பரிசும் வென்றது. 

பெண்கள் பிரிவில் புதுவை பாரதிதாசன் மகளிர் கல்லூரி முதல் பரிசும், இந்திரா காந்தி கலைக்கல்லூரி 2-ம் பரிசும், இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி 3-ம் பரிசும் புதுவை தொழில் நுட்ப பல்கலைக்கழகம் 4-ம் பரிசும் வென்றது. 

இப்போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கல்லூரி முதல்வர் மலர்கண் பரிசுக்கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை தலைவர் அருண்மொழி, ஆராய்சி மற்றும் மேம்பாடு துறை தலைவர் வள்ளி, வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார், முன்னாள் மாணவர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் ராமசாமி, உடற்கல்வி துறை இயக்குனர் மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News