உள்ளூர் செய்திகள்
கிராம வாய்கால்கள் தூர்வாரும் பணிக்கு டெண்டர்- அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
கிராம வாய்கால்கள் தூர்வாரும் பணிக்கு டெண்டர் விடப்படுகிறது என அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசு பொதுப்பணித்துறை சில பணிகளுக்கு குறுகிய கால ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
குமாரமங்கலத்தில் இருந்து அபிஷேகபாக்கம் டேங்க் வரை உள்ள பிரதான ஆத்து வாய்க்கால் தூர்வாருதல், கோர்க்காடு துணை வாய்க்கால் தூர்வாருதல் (கீழூர் நிறுத்தத்தில் இருந்து கோர்க்காடு தொட்டி வரை உள்ள கால்வாய்), ஏம்பலம் பாசனப்பிரிவில் உள்ள சிவராந்தகம் கால்வாய்- உபரிநீர்நிலை தொட்டி, தாணிக்குப்பம் வடிகால் வாய்க்கால் தூர்வாருதல், புதுவை முருங்கப்பாக்கம் 1-வது மதகில் தொட்டி ஷட்டருடன் சேதமடைந்த மதகு நுழைவுவாயில் அறை புனரமைத்தல்.
புதுவை செம்பியம்பாளையம் கிராமத்தில் உள்ள ஏம்பலம் குஞ்சன் ஓடையை தூர்வாருதல் (கோர்க்காடு தொட்டி வாய்க்காலில் இருந்து கூடுவையாறு வரை) பணிகள் நடக்க உள்ளது.
ஒப்பந்தப்புள்ளி சமர்பிக்க விரும்புவோர் பொதுப்பணித்துறை இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.