உள்ளூர் செய்திகள்
மீன்பிடிக்க செல்லாததால் வலைகளை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள மீனவர்கள்.

மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை

Published On 2022-05-19 07:42 GMT   |   Update On 2022-05-19 07:42 GMT
வேதாரண்யத்தில் கடல் சீற்றத்தால் மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம்  வேதாரண்யம்  பகுதியில் காற்று அதிகமாக விசுவதாலும் கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் மூன்றாவது நாளாககடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ள பள்ளம், கோடியக்கரை, மனியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 5000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. கடலின் உள்ள பகுதியில் காற்று பலமாக வீசுவதாலும் நீரோட்டம் மாற்றத்தினால்  மீன்கள் கிடைக்கவில்லை 

இதனால் பைபர் படகு மீனவர்கள் மூன்றாவது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை இதனால்மீனவர்கள் தங்கள் வலைகள் மற்றும் படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.
Tags:    

Similar News