உள்ளூர் செய்திகள்
.

ராயக்கோட்டை அருகே நாய்கள் கடித்து குதறியதால் புள்ளி மான் பலி

Published On 2022-05-18 16:11 IST   |   Update On 2022-05-18 16:11:00 IST
ராயக்கோட்டை அருகே நாய்கள் கடித்ததில் புள்ளிமான் பரிதாபமாக இறந்தது.
ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை வனச்ச ரகத்திற்கு உட்பட்டது ஊடேதுர்க்கம் காப்பு காடு. இந்த காட்டில் இருந்து புள்ளிமான் ஒன்று வழிதவறி நேற்று காலை திம்ஜேப்பள்ளி ஊராட்சி அடக்கம் கிராமத்திற்கு வந்தது.

அந்த நேரம் அங்கு சுற்றிய நாய்கள் மானை விரட்டி கடித்தது. இதில் காயம்அ டைந்த மானை பொதுமக்கள் மீட்டனர். இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர்ஈ ஸ்வரி முத்தன் ராயக்கோட்டை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து வனத்துறையினர் அங்கு வந்தனர். தொடர்ந்து கால்நடை மருத்துவர் வெங்கட சுப்பிரமணியன் மானுக்கு சிகிச்சை அளித்தார். இதைத்தொ டர்ந்து வனத்துறையினர் மானை கொண்டு செல்லும் வழியில் மான் உயிர்இழந்தது. 

இதையடுத்து அந்த புள்ளிமான் பாவாடரப்பட்டியில் வனத்துறைக்கு சொந்தமான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கால்நடை மருத்துவ குழுவினர்மா னின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். தொடர்ந்து மான் புதைக்கப்பட்டது.

Similar News