உள்ளூர் செய்திகள்
கைது

காரைக்காலில் 3 வயது மகளுக்கு பாலியல் தொல்லை- பஸ் கண்டக்டர் போக்சோவில் கைது

Published On 2022-05-18 10:30 GMT   |   Update On 2022-05-18 10:30 GMT
காரைக்காலில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பஸ் கண்டக்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால்:

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த, 36 வயதுநபர், தனியார் பஸ் கண்டக்டராக பணியாற்றி வருகிறது. இவரது மனைவி 3 வயது மகளுடன் காரைக்காலில் தாய்வீட்டில் உள்ளார்.

நேற்று முன்தினம் மாமனார் வீட்டிற்கு வந்த நடத்துனர், 3 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையறிந்த சிறுமியின் தாய்,கோட்டுச்சேரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் கண்டக்டரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

காரைக்கால், சின்ன கண்ணு செட்டித் தெருவை சேர்ந்தவர் நவாஸ். இவர் வீடுகளுக்கு தண்ணீர் கேன் வினியோகிக்கும் வேலை செய்துவருகிறார்.

நகரப் பகுதியில் பாட்டி வீட்டில் வசித்து வரும் 15 வயது சிறுமியுடன் நவாசுக்கு பழக்கம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் சிறுமிக்கு நவாஸ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் உறவினர் போலீசில் புகார் கொடுத்தார். நவாஸ்மீது ‘போக்சோ’ பிரிவில் வழக்கு கைது செய்து,சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News