உள்ளூர் செய்திகள்
பயிற்சி செய்த மாணவிகளை படத்தில் காணலாம்.

கிருஷ்ணகிரியில் அறிஞர் அண்ணா கல்லூரியில் யோகா பயிற்சி முகாம்

Published On 2022-05-18 15:47 IST   |   Update On 2022-05-18 15:47:00 IST
கிருஷ்ணகிரியில் அறிஞர் அண்ணா கல்லூரியில் யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிற்சி முகாம் நடை பெற்றது.
கல்லூரியின் முதல்வர் தனபால் யோகா தின தலைமையுரையில் மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாது உடல் நலனில் முக்கியத்துவம் கொடுத்து முன்னேற வேண்டும். 

ஒவ்வொரு நாளும் யோகா செய்வதன் மூலம் மனதுக்கு அமைதி, ஆரோக்கியமான உடல் நலம், ஒழுக்கம் ,நினைவுத் திறன் அதிகரிப்பு,ரத்த ஓட்டம் சீராகுதல் ,புதிய சிந்தனை திறன் மேம்படுதல் ,நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு யோகா பயிற்ச்சி பயன் அளிக்கிறது. 

மேலும் தன்னம்பிக்கை, சுய கட்டுப்பாடு, மன ஒருமைப்பாட்டை வளர்க்கலாம். அனைத்து வயதினரும் வாழ்வை வளமாக்க யோகப் பயிற்சி செய்யலாம் என்று பேசினார். 
யோகா பயிற்சிகளை கல்லூரியின் உடற்கல்வி பேராசிரியர்களான விஜய் ஆனந்த் மற்றும் பிரேமா மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்தனர். 

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள்மு னைவர் ஜெகன், ஸ்டீபன் விக்டர் ஆண்டனி, ராமமூர்த்தி ஏற்பாடு செய்தனர். யோகா பயிற்சி தினவிழாவில் 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

Similar News