உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

சாராய கடத்தல் வழக்கில் வாலிபர் கைது

Published On 2022-05-18 09:22 GMT   |   Update On 2022-05-18 09:22 GMT
திருமருகல் அருகே சாராய கடத்தல் வழக்கில் தேடப்பட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சி தேப்பி–ராமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகுமார் மகன் அபிமன்யு (வயது 20). இவர் கடந்த 15-ம் தேதி பாண்டிச்சேரியில் இருந்து திருவாரூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சாராயத்தை மூட்டையில் வைத்து கடத்தி சென்றுள்ளார்.

அப்போது அங்கு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருக்கண்ணபுரம் சப்-இன்ஸ்பெக்டர் இரணியன் அபிமன்யுவை விரட்டி பிடிக்க முயன்றுள்ளார்.அப்போது மோட்டார் சைக்கிளை விட்டு அபிமன்யு தப்பி சென்று தலைமறைவானார்.

இந்த நிலையில் திருக்கண்ணபுரம் போலீசார் அபிமன்யு மீது வழக்கு பதிவு செய்து அபிமன்யுவை தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அபிமன்யுவை திருப்புகலூர் கடைத்தெருவில் கைது செய்து திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி கைது செய்து சிறையில் அடைத்தார்.
Tags:    

Similar News