உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

தொழில் முனைவோர் மாநாடு- அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

Published On 2022-05-18 14:19 IST   |   Update On 2022-05-18 14:19:00 IST
ஜூன் 3, 4-ந் தேதிகளில்பு துவையில் தொழில் முனைவோர் மாநாடு நடத்தப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளர்.
புதுச்சேரி:

புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை காவல்துறை, கல்வித்துறை, தொழில்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பதிவு உயர்வு கொடுக்கப்பட்டு வருகிறது. அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட்டு வருகிறது.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி மாநில மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறோம்.

பிரதமர் கூறியது போல பெஸ்ட் புதுவையை நோக்கி அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது.

அடுத்த மாதம் (ஜூன்) 3,மற்றும்4-ந் தேதிகளில் புதுவையில் தொழில் முனைவோர் மாநாடு நடத்த உள்ளோம். இந்திய மற்றும் வெளிநாடுகளில் இருந்து முதலீட்டாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

பல்வேறு முதலீட்டாளர்கள் புதுவையில் முதலீடு செய்ய தயாராக உள்ளனர். தொழில் செய்ய உகந்த மாநிலமாக புதுவையை உருவாக்க வேண்டும் என்பது அரசின் எண்ணம். 

இவ்வாறு நமச்சிவாயம் கூறினார்.

Similar News