உள்ளூர் செய்திகள்
மரணம்

மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கி தொழிலாளி பலி

Published On 2022-05-18 06:17 GMT   |   Update On 2022-05-18 06:17 GMT
மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகே கடலில் குளித்த தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:

செங்கல்பட்டு, சத்தியா நகரை சேர்ந்தவர் சிட்டி பாபு. இவரது மகன் பாலாஜி(வயது26). பெயிண்டர்.

இவர் மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகே கடலில் குளித்தார். அப்போது வந்த ராட்சத அலை பாலாஜியை கடலுக்குள் இழுத்து சென்றது. இதில் அவர் தண்ணீரில் மூழ்கினார். தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பாலாஜியை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் கடலில் மூழ்கி மாயமானார். அவரை தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் சூலேரிக்காடு கடற்கரையில் பாலாஜியின் உடல் கரை ஒதுங்கியது. இதுகுறித்து மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News