உள்ளூர் செய்திகள்
பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்.

டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2022-05-17 09:12 GMT   |   Update On 2022-05-17 09:12 GMT
திட்டச்சேரியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திட்டச்சேரி பஸ் நிலையத்தில் தேசிய டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திட்டச்சேரி பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் தலைமை தாங்கினார். திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் பரமநாதன் வரவேற்றார். 

சித்த மருத்துவர் அஜ்மல்கான் முன்னிலை வகித்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி டெங்கு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினார். முன்னதாக டெங்கு குறித்த உறுதி மொழியை பொதுமக்கள் ஏற்றுக்கொண்டனர். 

இதில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News