உள்ளூர் செய்திகள்
மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி
குத்தாலம் பள்ளியில் தேசிய பசுமைப் படையில் சிறப்பாக பணியாற்றிய மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
திருமருகல் அருகே உள்ள குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய பசுமைப் படையில் 2021-22 கல்வியாண்டில் சிறப்பாக பணியாற்றிய மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இலுப்பை மரக்கன்றுகள் நூறு வளர்த்தமைக்காக ஜெய் ஆகாஷ், ஜீவன் ஆகிய மாணவர்களுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற காரணத்திற்காக ஜித்தா, தர்ஷினி ஆகியோருக்கும் தூய்மை பராமரித்த லுக்காக பிரியதர்ஷினி என்ற மாணவிக்கும் பசுமை வீரர் விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி மாணவர்களுக்கு விருது வழங்கினார். முன்னதாக கணித ஆசிரியர் சிவ சண்முகநாதன் வரவேற்றார்.
தேசிய பசுமைப்படை பள்ளி ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் காட்சன் ஐசக் நன்றி கூறினார்.