உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வயிற்று வலி குணமாகததால் தீக்குளித்து பெண் தற்கொலை

Published On 2022-05-15 09:53 GMT   |   Update On 2022-05-15 09:53 GMT
கோவிலுக்கு சென்று நேர்த்திக் கடன் செலுத்தியும் வயிற்று வலி குணமாகததால் விரக்தியில் தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு:

கோவிலுக்கு சென்று நேர்த்திக் கடன் செலுத்தியும் வயிற்று வலி  குணமாகததால் விரக்தியில் தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு மாவட்டம் சதுமுகை பள்ளிகூட தோட்டம் பகுதியை சேந்தவர் பழனிசாமி. விவசாயி. இவரது மனைவி ராஜம்மாள் (50). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் ராஜம்மாளுக்கு கடந்த 6 மாதமாக வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. இதனால் ராஜம்மாள் மருத்து வமனைக்கு செல்லாமல் கோவிலுக்கு சென்று வயிறு வலி சரியாக பல நேர்த்திக்கடன்களை செய்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்ட ராஜம்மாள், வீட்டின் மேல் தளத்திற்கு சென்று, தனக்கு தானே தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார்.

இதில், ராஜம்மாளின் அலறல் சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனு மதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜம்மாள் பரிதாபமாக இறந்தார். 
இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News