உள்ளூர் செய்திகள்
ஆறு.சரவணதேவர்

ராஜபக்சே குடும்பத்தினருக்கு இந்தியா எந்த உதவியும் செய்யக்கூடாது - ஆறு.சரவணத்தேவர் வலியுறுத்தல்

Published On 2022-05-15 09:36 GMT   |   Update On 2022-05-15 09:36 GMT
ராஜபக்சே குடும்பத்தினருக்கு இந்தியா எந்த உதவியும் செய்யக்கூடாது என முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவனத்தலைவர் ஆறு.சரவணத்தேவர் வலியுறுத்தியுள்ளார்.
நாகப்பட்டினம்:

முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவனத்தலைவர் ஆறு சரவணத்தேவர் செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,

2009ம் ஆண்டு இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் போது, அந்த நாட்டின் பூர்வகுடி மக்களான ஈழத்தமிழர்களின் மீது குண்டுகள் வீசியும், வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியும், தமிழ் மக்களை படுகொலை செய்த ராஜபக்சே, இப்போது இலங்கையில் பெரும் கலவரம் வெடித்து உயிருக்கு பயந்து குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பிக்கும் சூழலுக்கு ஆளாகி உள்ளார்.

அவருக்கு இந்திய அரசு எந்த வித உதவியும் செய்யக்கூடாது. இந்தியா அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கவோ, மறைமுகமாக உதவி செய்யவோ கூடாது. இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து, இலங்கையில் வறுமையின் பிடியில் சிக்கி உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News