உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

பெரம்பலூரில் இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை

Published On 2022-05-15 08:23 GMT   |   Update On 2022-05-15 08:23 GMT
பெரம்பலூரில் இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பிலிமிசை ராஜாஜி தெருவை சேர்ந்தவர் ராஜாங்கம். அரசு பஸ் டிரைவர்.  

இவரது மகள் ராஜேஸ்வரி வயது 29. நேற்று மாலை வீட்டில் இருந்த ராஜேஸ்வரி திடீரென்று பூச்சி கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். 

இதனை கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே ராஜேஸ்வரி உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை பிரேத கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மருவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ராஜேஸ்வரி திருமணமாகாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரிய வில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News